நட்புக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓர் அறிவிப்பு:
சீசன் நல்லாருக்கும் போதே லீவு போட்டுனாலும் வந்துட்டு போயிருங்க!
நீங்க வரும்போது சீசன் இல்லையேனு வருத்தப்படாதீங்க!
சனி, ஞாயிறு வராதீங்க வந்தால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் தான் மிஞ்சும்!
முடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது!
தங்க நகைகள் அணிந்து குளிப்பதை முடிந்தவரை தவிருங்கள் முடியாத போது திருக்குகளை சரி செய்து கவனமாக குளித்திடுங்கள்!
டூர் தான வந்துருக்கோம்னு சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தாதீர்கள் அதற்குரிய இடங்களை பயன்படுத்துங்கள்!
வாகனங்களில் வருபவர்கள் கண்ட இடங்களில் வண்டியை நிறுத்தாதீர்கள் உங்களால் தான் மொத்த நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது!
உங்கள் ஊரில் நீங்கள் பெரிய "லார்டு லபக்காக" இருக்கலாம் அந்த தோரணையை இங்கு வந்து காட்டி பிரச்சினை செய்ய வேண்டாம்.
போலீசை எதிர்த்து பேசி அவர்களுடன் சண்டையிடுவது உங்களின் பண அதிகார மமதையை அவர்களிடம் காட்டும் செயல்களை அறவே தவிர்த்திடுங்கள்!
போதையில் பெண்களை தொடுவது பாலியல் ரீதியாக பேசுவது அருவருக்கத்தக்க கமெண்ட்களை பேசுவதை தவிருங்கள்!
இன்று நாம் வர்ணித்தால் நமது குடும்பத்தினரை எவனாவது வர்ணிப்பான்!
இறைவன் கொடுத்த இயற்கையை ரசித்து கடந்து செல்லுங்கள்!
நாம் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் அருவில தண்ணியே வரக்கூடாது இருந்தாலும் இவ்வளவாச்சும் வருதேனு சந்தோசப்பட்டுக்கோங்க!!
இயற்கையே மேலானது!
இயற்கையை நாம் சீண்டினால்
இயற்கை நம்மை தீண்டிவிடும்!
நன்றி: மெயினருவி தெனாலிராமன் மற்றும் குற்றாலம் நலம் விரும்பிகள்.